×

நாகப்பட்டினத்தில் அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மத்திய சங்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், சிஐடியூ மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் பேசினார். போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பக்கூடாது. வார விடுப்பு, வார ஓய்வு, ஒப்பந்தப்படி ஊதியம் ஆகியவை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற நல அமைப்பு செயலாளர் ஜீவானந்தம், சிஐடியூமாவட்ட குழு உறுப்பினர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Government Rapid Transit ,Nagapattinam ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...